#கன்னியாகுமரி || குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து காவல் துறையினர், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் விஜயன்(51) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்ததது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவரிடமிருந்து 30 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், விஜயனை கைது செய்துள்ளனர். மேலும் விஜயன் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gutkha seller arrest in kanniyakumari


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->