பேரறிவாளன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்து...!! அரசியல் அழுத்தத்தால் பின் வாங்கிய கல்லூரி..!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் வருடாந்திர விரிவுரை நிகழ்ச்சியில் "மறுக்கப்பட்ட நீதியும் முடிவு வராத தேடலும்" என்ற தலைப்பில் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் விரிவுரை ஆற்ற உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிகழ்ச்சிக்காக சென்னை தரமணியில் உள்ள ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் என்ற இதழியல் கல்லூரியில் நடத்திக் கொள்ள அனுமதி பெற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் பேரறிவாளன் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் சென்னையில் உள்ள இதழியல் கல்லூரியின் வளாகத்தில் உள்ள அரங்கத்தை டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் தங்கள் நிகழ்ச்சிக்காக வாடகைக்கு எடுத்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்ட துண்டு பிரசுரங்களில் ஏசியன் கல்லூரி இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக அச்சிடப்பட்டிருந்தது. 

இந்த விவகாரம் கல்லூரியின் நிர்வாகத்திற்கு தெரிய வரவே நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏசியன் கல்லூரி தரப்பில் இருந்து "இந்த நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

சமூக வலைதளங்களில் இந்த நிகழ்ச்சிக்கு எதிரான கருத்துக்கள் பதிவிடப்பட்டன. அரசியல் ரீதியிலும் பல எதிர்ப்புகள் வந்தன. இதன் காரணமாக நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். 

இந்த நிகழ்ச்சிக்காக அரங்கம் வாடகைக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டோம். இதன் காரணமாக வரும் 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி எங்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெறாது" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய சட்டப் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதே நாள் அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் நிகழ்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Journalism College canceled the Perarivalan attending program


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->