ஈரோடு: சட்டவிரோதமாக மது விற்றவர் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள கைகாட்டி பாலத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ஆப்பக்கூடல் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு மது விற்பனை செய்து கொண்டு இருந்தவரை கையும் களவுமாக போலீசார் பிடித்துள்ளனர்.

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், திண்டுக்கல் கள்ளிமந்தையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 45)என்பதும், அவர் சட்டவிதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் இருந்த 7 மது பாட்டல்களை பறிமுதல் செய்த போலீஸ் சார் வெங்கடேசனை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Liquor seller arrested in erode


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->