மதுரை சித்திரை திருவிழா..இந்த ஆண்டு 496 மண்டபங்களில் அழகர்  எழுந்தருளி காட்சியளிகிறார்! - Seithipunal
Seithipunal


மதுரை சித்திரை பெருந்திருவிழா அடுத்த மாதம் 8-ந் தேதி தொடங்குகிறது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 12-ந்தேதி அதிகாலை கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். 

தமிழகத்தில்  மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றாக மதுரை சித்திரை பெருந்திருவிழா உள்ளது .இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி சப்பர முகூர்த்த விழா நடைபெற்றதை தொடர்ந்து வருகிற 27-ந் தேதி  மங்கள இசையுடன் முகூர்த்தக்கால் பூஜை நடக்க உள்ளது.

இதை அடுத்த  8-ந் தேதி அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி ,10-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார். அதனை தொடர்ந்து 11-ந் தேதி மதுரை மூன்று மாவடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்து வணங்கி அழகரை வரவேற்கிறார்கள்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 12-ந்தேதி அதிகாலை கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். முன்னதாக 496 மண்டபங்களில் அழகர்  எழுந்தருளி அப்போது அங்கு திரண்டு இருக்கும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

அதனை தொடர்ந்து 13-ந்தேதி  மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல்,  இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார காட்சி நடைபெறும். 14-ந்தேதி இரவு சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா. 15-ந்தேதி காலையில் அழகர்மலைக்கு பிரியா விடை பெற்று கள்ளழகர் திரும்புகிறார்.17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai Chithirai Festival This year,Azhagar appears in 496 mandapams


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->