கிடுகிடுவென உயர்ந்த மல்லிகைப்பூ விலை.! கிலோ எவ்வளவு தெரியுமா?
Madurai jasmine flower price hike
மதுரைm மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. விற்பனைக்காக கொண்டு வரும் பூக்களை மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் இருந்து அதிக அளவில் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் தொடர்ச்சியாக தென் தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக மலர்களின் அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பூச்செடிகள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன.
இதனால் பூக்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வரும் பூக்களின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/malikai-tqdau.jpg)
மேலும் தற்போது வைகாசி மாதம் என்பதால் முகூர்த்த தினங்கள் மற்றும் விசாகம் உள்ள இடம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதன் காரணமாக பூக்களின் விலை இரண்டு நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 200 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 800 முதல் ரூ. 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதை போல் செவ்வந்தி ரூ. 250க்கும், அரளி ரூ. 300க்கும், முல்லை ரூ. 350 க்கும், பிச்சிப்பூ ரூ. 500க்கும், ரோஜா ரூ. 150 க்கும், சம்மங்கி ரூ. 150 க்கும் தாமரைப்பூ ஒன்றின் விலை ரூ. 5க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
Madurai jasmine flower price hike