நாமக்கல்: சற்றுமுன் அரசு மாணவர்கள் மோதல் - தலையில் அடிபட்டு பலியான மாணவன்! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி அடுத்த வரகூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் இருவர் மோதிக்கொண்டதில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பதினொன்றாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்/

மேலும் முதல் கட்ட தகவலின் படி, இரண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், நவலப்பட்டியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

சீர்காழி அருகே தனியார் பேருந்து மோதி மூன்று பேர் பலியான சோகம்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தனியார் பேருந்து, இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

கதிராமங்கலம் பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த அந்த தனியார் பேருந்து, கட்டுப்பட்ட இழந்து இருசக்கர வாகனங்களில் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக சம்பவ இடத்தை விபத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மணிகண்டன், ஜெயசீலன், புருஷோத்தமன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தனியார் பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Namakkal School Student attacked and killed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->