எமனாக மாறிய மரக்கிளை.. பெரம்பலூர் அருகே சோகம்.!
Perambalur kamban street Men died In house
மரக்கிளையை வெட்டிய நபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெரம்பலூரிலுள்ள கம்பன் தெரு பகுதியில் 55 வயதான தங்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், நேற்று தங்களது வீட்டில் இருக்கும் மர மட்டைகளை ஒழுங்குபடுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/death sirumi-wazq8.jfif)
ஆரோக்கிய நகரில் உள்ள அவரது தோட்டத்தில் இருக்கும் தேக்கு மர கிளைகளை வெட்டி சீர் செய்து கொண்டிருந்தார். வீட்டின் மாடியில் நின்று கொண்டு அவர் மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்துள்ளார்.
இதில் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தங்கையா துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Perambalur kamban street Men died In house