கிருஷ்ணகிரி || முடியை திருத்த சொன்ன பாட்டி - பிளஸ் 2 மாணவன் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை அருகே உள்ளட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்டப்பன் மகன் கோவிந்தராஜ். இவர் உள்ளுகுறுக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று கடையில் முடி திருத்தம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது பார்த்த மாணவனின் பாட்டி, என்னடா இப்படி முடி வெட்டிருக்கிறாய்?, ஒழுங்காக முடியை திருத்தம் செய்துவிட்டு வீட்டுக்கு வா இல்லாவிட்டால் வீட்டிற்கு வராதே என்று கடுமையாக திட்டினார். இதனால் மனமுடைந்த மாணவன் கோவிந்தராஜ் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. 

இதனால், பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் மாணவரை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடினர். இந்த நிலையில், மாணவன் புளிய மரத்தடியில் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 

அங்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plus 2 student sucide in krishnagiri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->