திடீர் தீ விபத்து - தொழிற்சாலையில் 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள பரூக் மாவட்டத்தில் அங்கலேஷ்வர் தொழிற்பேட்டையில், கழிவுப்பொருட்களை சுத்திகரிப்பு செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள சேமிப்பு கிடங்கில் தொழிலாளர்கள் இன்று வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி அவர்கள் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. 

அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே இந்த வெடி விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நன்கு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four peoples died for fire accident in gujarat


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->