கழிவுநீர் வாசலுக்கு வந்ததால் தகராறு.. காய்கறி வியாபாரியை கொலை செய்ய முயன்ற பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது..! - Seithipunal
Seithipunal


காய்கறி வியாபாரியை கொலை செய்ய முயன்ற பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை, மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. காய்கறி வியாபரியான இவரை கடந்த 5 நாட்களுக்கு முன் ஒரு கும்பல் அரிவாளால் கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றது.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை கொலை செய்ய முயற்சித்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அவரிடம் கய்கறி வாங்குவது போல நடித்து ஒரு கும்பல் வெட்டியது தெரியவந்தது.

இதனை அடுத்து, அவரின் வீட்டின் எதிரே வசிக்கும் ராணி என்பவரின் குடும்பத்தினரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொன்டனார். அப்போது கழிவுநீர் வாசலுக்கு வந்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் கொலை முயற்சி செய்ததை ஒப்புகொண்டனர். அவர்கள் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police arrested 5 member Due to attempt Murder


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->