மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... "பாதிரியாருக்கு" வாழ்நாள் சிறை.! நீதிமன்றம் அதிரடி...! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் மனநலம் பாதித்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாதிரியார் ஜோசப் ராஜா (49). இவர், கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய சிறுமி சர்ச்சுக்கு தனியாக வந்தபோது, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்த சிறுமியின் தாய் இது குறித்து விசாரித்துள்ளார். அப்பொழுது பாதிரியார் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜோசப் ராஜாவை கைது செய்தனர். இதையடுத்து இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ராஜாவுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூபாய் பத்து லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அபராத தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Priest jailed for life for sexually harassing mentally challenged girl in virudhunagar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->