ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்!...இதோ உடனே விண்ணப்பியுங்கள்!
Rupess 1 lakh subsidy to buy an auto apply now
சென்னையில் வசிக்கும் பெண்கள் பிங்க் நிற ஆட்டோவினை வாங்க ரூ. 1 லட்சம் மானியம் பெற எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சமூக நலத்துறை சார்பில், சென்னையில் பெண்களுக்கு 250 CNG/Hybrid ஆட்டோக்கள் வாங்குவதற்கு தலா ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
.
மேலும், பிங்க் ஆட்டோவை பெறுவதற்கு ஒரு சில தகுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தேவையான தகுதிகள் பின்வருமாறு,
>>பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
>>கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
>>10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
>>ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
>>சென்னையில் குடியிருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பெண்கள் பிங்க் ஆட்டோவை பெறுவதற்கான ஒரு லட்சம் ரூபாய் மானியத்திற்கு தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rupess 1 lakh subsidy to buy an auto apply now