ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்!...இதோ உடனே விண்ணப்பியுங்கள்! - Seithipunal
Seithipunal


சென்னையில் வசிக்கும் பெண்கள் பிங்க் நிற ஆட்டோவினை வாங்க ரூ. 1 லட்சம் மானியம் பெற எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சமூக நலத்துறை சார்பில், சென்னையில் பெண்களுக்கு 250 CNG/Hybrid ஆட்டோக்கள் வாங்குவதற்கு தலா ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று  அரசு அறிவித்துள்ளது. இதனை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
.
மேலும், பிங்க் ஆட்டோவை பெறுவதற்கு ஒரு சில தகுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தேவையான தகுதிகள் பின்வருமாறு,

>>பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

>>கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

>>10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

>>ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

>>சென்னையில் குடியிருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பெண்கள் பிங்க் ஆட்டோவை பெறுவதற்கான ஒரு லட்சம் ரூபாய் மானியத்திற்கு தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rupess 1 lakh subsidy to buy an auto apply now


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->