சேலத்தில் இரு பிஞ்சுகள் உட்பட 3 பேர் பலி! வேதனையில் முதலமைச்சர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


சேலம், வீரக்கல் கிராம ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வீரக்கல் கிராமம், கொத்திக்குட்டை ஏரியில் கடந்த (20.10.2024) அன்று நண்பகல் 12.00 மணியளவில் இரு சிறார்கள், இளம்பெண் என மூழ்கி பலியாகினர்.

வீரக்கல் கிராமம், வீரக்கல் புது காலனியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகள் சிவநந்தினி (வயது 20), மகன் சிவகிரி (வயது 10) மற்றும் முனுசாமி என்பவரின் மகள் திவ்யதர்ஷினி (வயது 14) ஆகிய மூவரும் துணிதுவைக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem 3 death CM MK Stalin Condolence


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->