திருவாரூரில் சோகம் - தந்தைக் கண்டித்த ஆத்திரத்தில் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மேலராதாநல்லூர் ஊராட்சி வடபாதியை சேர்ந்தவர் மணிமாறன் என்பவரின் மகள் பிரியதர்ஷினி. பதினாறு வயதான இவர் கூத்தாநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், பிரியதர்ஷினி பொதுத்தேர்வுக்கு படிக்காமல் நீண்ட நேரம் செல்போன் பார்த்துக்கொண்டு இருந்ததால், அவரது தந்தை மணிமாறன் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த பிரியதர்ஷினி, தனது பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நேரம் பார்த்து வீட்டில் இருந்த கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை குடித்துள்ளார். 

இதையடுத்து மயக்கமடைந்த பிரியதர்ஷினியை அவரது உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பிரியதர்ஷினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school student sucide in thiruvarur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->