ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை...! - Seithipunal
Seithipunal


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்ததையடுத்து மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன் பிடிக்க சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற 9 பேர் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த போது, படகு பழுதாகி நெடுந்தீவு பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகை சிறை பிடித்து, படகில் இருந்த படகின் உரிமையாளர் அந்தோணி, சேசு ராஜா, ரூபன், முத்து, ஜான்சன், லெனின், பிரகதீஷ், ஜேக்கப், மற்றொரு அந்தோணி ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து 9 மீனவர்களையும் விசாரணைக்காக கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sri Lanka Navy arrested 9 Rameswaram fishermen


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->