மீண்டும்..மீண்டும்! பள்ளியில் புகுந்து 4 மாணவர்களை கடித்து குதறிய தெருநாய்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில் பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 மாணவர்களை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆர்புதுபட்டினம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

அதே வளாகத்தில் அங்கன்வாடியும் செயல்பட்டு வருகிறது. நேற்று மாணவர்கள் உணவு இடைவெளியின்போது பள்ளிக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக சென்ற தெரு நாய் ஒன்று பள்ளி மாணவர்களை விரட்டி உள்ளது. இதில் பீதிஅடைந்த மாணவர்கள் நாலபுறமும் சிதறி ஓடி உள்ளனர். இருப்பினும் அங்கன்வாடியில் இருந்த சிறுமி தீட்சையா ஸ்ரீ, அஷிம் முஸ்தபா, அமலேஷ், அகிலேஷ் ஆகிய நான்கு பேரையும் தெரு நாய் கடித்துள்ளது.

இதனையடுத்து அந்த நாயை அங்கிருந்து விரட்டிய பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் நாய் கடித்து காயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stray dog ​​entered the Anganwadi and bitten 4 students


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->