கொடூரம்! கோவத்தில் மனைவியை கல்லை போட்டு கொலை செய்த கணவன்! - Seithipunal
Seithipunal


தர்மபுரியில் குடும்பத்த தகராறில் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த விட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மனைவி சின்ன பொண்ணு. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் மட்டும் ஒரு மகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இவரது மகன் மற்றும் மகளுக்கு திருமணம் ஆகி அவரவர் தனித்தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கோவிந்தனும் அவரது மனைவி சின்னபொண்ணுவும் திருதங்கமேடு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இருவரும் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து கொண்டும் ஆடு மாடுகளை மேய்த்தும் பிழைப்பு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

சம்பவத்தன்று விவசாய நிலத்தில் சின்ன பொண்ணு ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கோவிந்தன் மனைவியுடன் வழக்கம்போல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகில் இருந்த பெரிய கல்லை தூக்கி கோவிந்தன் தனது மனைவியின் தலைமீது போட்டு கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இந்த கொலை சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தன் ஆதிரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டுமோ என்று கதறி அழுததாக கூறப்படுகிறது. பின்னர் போலீசுக்கு பயந்து வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த கணவன் மனைவி இரண்டு பேரின் சடலங்களை  மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த கொலை, தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The husband who stoned his wife to death in Govt


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->