உயரும் பலி எண்ணிக்கை! அதிரவைத்த திருவள்ளூர் பெயின்ட் தொழிற்சாலையில் தீ விபத்து! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் அடுத்த கக்கலுர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பெயிண்ட் தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பெயிண்டுக்கு பயன்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் வெடித்து சிதறின. 

இதன் காரணமாக தீ மளமளவென ஆலை முழுவதும் பரவியது. உடனடியாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த தீ விபத்தில் ஆலையில் பணியாற்றிய மூன்று பேர் உயிரிழந்தனர். இதில் இருவர் உடல் கருகி பலியாகினர். மேலும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெயிண்ட் மற்றும் ரசாயனம் ஆலை முழுவதும் இருப்பதால், தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்புத் துறையினருக்கு சவாலாக இருந்தது.

இந்நிலையில், காக்களூர் தொழிற்பேட்டை பெயின்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விமதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 3 பேர் உடல் கருகி பலியான நிலையில், இன்று மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆலையில் இருந்த பாய்லர் வெடித்து சிதறியதில் சுவர்கள் இடிந்து விழுந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக்க போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலையின் நிர்வாக உரிமையாளர் கணபதியை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Paint Factory Fire Accident


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->