பூந்தமல்லி அருகே 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது.!! - Seithipunal
Seithipunal


பூந்தமல்லி அருகே 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது.!!

சென்னையில் உள்ள பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  பொருள் அதிகளவில் கடத்திச் சொல்லப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் பூந்தமல்லியில் அரசு பேருந்தில் இருந்து சந்தேகப்படும்படியாக இரண்டு நபர்கள் கீழே இறங்கி வந்துள்ளனர்.

இதை கவனித்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தியதில் பையில் தடை செய்யப்பட்ட கேட்டமின் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பாலச்சந்திரன் மற்றும் ராம்குமார் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் இருவரும் டெல்லியில் இருந்து கேட்டமின் போதை பொருளை ரயில் மூலம் கடத்தி வந்து நாகப்பட்டினத்தில் விற்பனை செய்து வந்ததும். அவர்களிடமிருந்து போலீசார் ரூபாய் இரண்டு கோடி மதிப்புள்ள 30 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for drugs kidnape in chennai poonthammali


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->