குடத்தில் வைத்து சாராய விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து ஐந்து பேர் உயிரிழந்தாக கூறப்படும் நிலையில், சங்கராபுரம் பகுதியில் குடத்தில் வைத்து சாராய விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று அதேபகுதியில் கலாச்சாராயம் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறைந்த விலையில் விற்கப்பட்ட கலாச்சாராயத்தை வாங்கி குடித்தவர்களுக்கு வாந்தி, தலைவலி மயக்கம் ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன், சுரேஷ், சேகர், மகேஷ், ஜெகதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராயம் விற்றவரை கைது செய்ய வேண்டும் எனவும் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க வேண்டும் எனவும் போலீசாரத்தில் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஒரே பகுதியில் உள்ள ஒரே தெருவை சேர்ந்த 5 பேர் கள்ளசாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சங்கராபுரம் பகுதியில் குளத்தில் வைத்து சாராய விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

video of selling liquor in a jug has gone viral on social media


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->