தூக்கில் தாய், தொட்டியில் பச்சிளம் குழந்தை.. அருப்புக்கோட்டையில் பயங்கரம்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சின்னபுள்ளியம்பட்டி பகுதியை சார்ந்தவர் முருகேசன். இவரது மகன் திருக்குமரன். திருகுமாரனிற்கும், சுந்தர்ராஜபுரம் பகுதியை சார்ந்த தர்மராஜ் என்பவரது மகள் மகாலட்சுமிக்கும் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இவர்கள் இருவருக்கும் தீபக் என்ற ஒரு வயதுடைய மகன் இருக்கும் நிலையில், திருக்குமரன் சிங்கப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் சி.சி.டி.வி ஆபரேட்டராக இருந்து வந்துள்ளார். மகாலட்சுமி தனது குழந்தையுடன் கணவரின் இல்லத்தில், மாமனார் முருகேசனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை வெளியே சென்ற முருகேசன், மதிய நேரத்தில் வீட்டிற்கு திரும்புகையில் மருமகளை தேடியுள்ளார். மருமகள் கீழ் வீட்டில் இல்லாததால், மாடிக்கு சென்று தேடியுள்ளார். இதில் மாடியில் மகாலட்சுமி மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த முருகேசன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மகாலட்சுமியின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த பரபரப்பில் குழந்தையை மறந்த நிலையில், குழந்தையை தேடுகையில், அங்குள்ள தண்ணீரில் தொட்டியில் பிணமாக மிதந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Virudhunagar Aruppukkottai Mother suicide child murder police investigation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->