பிரேசிலில் ஜனநாயகத்தை அழிக்க முயற்சி - எலான் மஸ்க் பதிலடி! - Seithipunal
Seithipunal


பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை  விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், லோகோவில் இருந்த குருவி படத்தை மாற்றியதோடு மட்டுமல்லாமல்  பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு பிரேசில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பதில் அளிக்க எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பட்ட நிலையில், எலான் மஸ்க் பதிலளிக்க மறுத்து, பிரேசிலில் செயல்பட்ட எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை நீக்கினார்.

அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசில் எக்ஸ் நிறுவனம் முடக்கப்படும் என உத்தரவிட்டு இருந்தது.

பிரேசில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்க எலன் மஸ்க் மறுத்ததையடுத்து, எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து பிரேசில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 24 மணிநேரத்திற்குள் எக்ஸ் தளத்தை பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நீதிபதி அலெக்ஸ்ண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டார்.

இந்நிலையில் எலன் மஸ்க் வெளியிட்டுள்ள  சமூகவலைதள பதிவில், சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம் என்றும்,  பிரேசிலில் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கின்றனர். பிரேசிலில் ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attempt to destroy democracy in Brazil Elon Musk retaliates


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->