கட்டிய மனைவி, பெற்ற மகள்கள், மாமியார்! 20 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சைக்கோ! - Seithipunal
Seithipunal


கட்டிய மனைவி பெற்ற மகள், மாமியார் என 20 ஆண்டுகளாக சொந்த குடும்பத்தை சேர்ந்த 9 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சைக்கோ கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். 

பிரேசில் நாட்டில் தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அந்நாட்டின்  நோவா ஓரியண்டே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்டு, அங்கிருந்து தப்பி வந்து பெண் தான் இந்த முழு விவரத்தையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர், தனது மனைவியை திருமணம் முடித்தது முதல் வீட்டு சிறையில் வைத்திருப்பதும், மூன்று வயது முதல் 22 வயதுக்கு உட்பட்ட அவரின் ஏழு குழந்தைகளும் அந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும் பெற்ற குழந்தைகள் குளிப்பதை, உடை மாற்றுவதை கூட சுவர்களில் துளையிட்டு குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் பார்த்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கருக்கலைப்பு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களிலும் அந்த நபர் ஈடுபட்டதாகவும், அண்மையில் இறந்து போன அவரின் மாமியாரை கூட பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் அவரின் மாமியார் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார், வீட்டு சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரின் மீதான அனைத்து குற்றசாட்டுகளையும் அவர் மறுத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

brazil Payco Abuser arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->