4 வது முறையாக வெற்றி... நம்பிக்கை உள்ளது - சசி தரூர் உறுதி.!
congress MP Shashi Tharoor speech
இந்திய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 102 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பியும் திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசி தரூர், வாக்கு பதிவு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ஜனநாயகம் பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவின் பன்மை துவத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க வந்துள்ளேன். தொகுதியின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரை நல்லிணக்கத்தை கண்டதால் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
English Summary
congress MP Shashi Tharoor speech