வெற்றிக்காக 18 ஆண்டுகள் போராடுகிறேன்... NTK சீமான் ஆவேசம்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, திரேஸ்புரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது, 

தூத்துக்குடியில் அ.தி.மு.கவும், தி.மு.கவும் தான் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை இல்லை என்றால் தாமிரம் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவித்தார்கள். 

ஆனால் இங்குள்ள நிலமும் தண்ணீரும் கேட்டுவிடும் என யாரும் தெரிவிக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்ற போது அதனை வாங்கி இருக்க வேண்டும். ஆனால் தடியடி நடத்தி பொதுமக்களை துரத்தி விட்டனர். 

இது தொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கை வழங்கி உள்ளார். ஆனால் கடந்த 6 மாதமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது இங்குள்ள அனைவரும் துடித்தனர். ஆனால் தமிழர்கள் கொல்லப்பட்ட போது யாரும் வாய் திறக்கவில்லை. நான் மட்டும்தான் துடிதுடித்தேன். 

வீட்டிற்கு தேவையான பொருட்களை தரம் பார்த்து வாங்குவது போல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நல்ல வேட்பாளர்களை பார்த்து ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். 

நாம் தமிழர் கட்சியுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக பல்வேறு கட்சியினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். இருப்பினும் நான் தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருந்ததால் அதனை மறுத்துவிட்டேன். 

கடந்த 18 ஆண்டுகளாக தேர்தல் வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். குறைந்த வாக்கு வித்தியாசம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சின்னம் கிடைக்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு நாங்கள் கேட்ட சின்னத்தை கொடுக்க மறுத்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman election campaign


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->