தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு!
Tamil Nadu including 21 states tomorrow voting
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நாளை தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் மாதம் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் நாளை முதல்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 21 மாநிலங்களுக்கு 102 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
Tamil Nadu including 21 states tomorrow voting