யானைப் பசிக்கு சோளப்பொறி போல... ஜெயக்குமார் பரபரப்பு குற்றசாட்டு.!
Jayakumar accused central government
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,
யானை பசிக்கு சோளப்பொறி போல புயல் பாதிப்பிற்கு, மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து ரூ. 1.5 லட்சம் கோடி கேட்டு உள்ளோம்.
ஆனால் ரூ. 7000 கோடி தான் கொடுத்துள்ளனர். வடமாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டும் தான் மத்திய அரசு வாரி வழங்குகிறது.
மத்தியில் பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுமே பாராமுகமாக செயல்படுகிறது. தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் நடத்துகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Jayakumar accused central government