விழுப்புரம் || குடிக்க பணம் கேட்ட கணவர் - மன உளைச்சலில் மகள்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்.!
three peoples sucide attempt in vilupuram
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மதுரா சீனங்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர்கள் வேடியப்பன் - ராஜேஸ்வரி. இவர்களுக்கு சரண்யா, புனிதா, கோபிகா உள்ளிட்ட மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் சரண்யா திருவண்ணாமலையில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படிப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு வேடியப்பன் மதுகுடிக்க மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டுச் வெளியே சென்று விட்டார். இதனால், மனமுடைந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்து விட்டார்.
இதை பார்த்து, அதிர்ச்சியடைந்த அவரது மூன்று மகள்களும் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples sucide attempt in vilupuram