மோடியை வீட்டிற்கு அனுப்பும் வரை திமுக தூங்காது - பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதாவது, அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி தலைவரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, தி.மு.க.விற்கு தூக்கம்போய்விட்டது என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆம் எங்களுக்கு தூக்கம்போய்விட்டது. பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்பும்வரை தி.மு.க. தூங்கப்போவதில்லை. தூக்கம் பார்க்காமல் நாங்கள் தேர்தல் பிரசாரம் செய்யப்போகிறோம். திருவண்ணாமலையில் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறவைத்தால் நான் மாதம் 2 முறை இங்கு வந்து தங்கி உங்களின் தொகுதி பிரச்சினைகளை தீர்த்துவைப்பேன்' என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uthayanithi stalin speech in election campaign


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->