அமெரிக்காவில் பயங்கரம்.... கார் மரத்தில் மோதி 3 இந்திய பெண்கள் பலி!
Car accident in America.. 3 indian women died
குஜராத்தின் அனந்த் மாவட்டத்தை சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் ஆகியோர் பனி நிமித்தமாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் மூவரும், தெற்கு கரோலினாவில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அங்குள்ள மரம் ஓன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. அதி வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி 20 அடி உயரத்தில் பறந்து அங்குள்ள பாலத்தின் எதிர்புறத்தில் உள்ள மரம் ஒன்றின் மீது மோதியது என்றும், அந்த காரணது நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதி வேகமாக வந்ததாகவும், இதனால் கார், மரத்தின் மீது மோதிய வேகத்தில் நொருங்கியது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் காரில் பயணம் செய்த 3 இந்தியப் பெண்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
English Summary
Car accident in America.. 3 indian women died