மாருதிக்குப் பிறகு அதிரடியாக விலையை உயர்த்திய கியா!இந்தியா விலை உயர்வு அறிவிப்பு: ஏப்ரல் 2025 முதல் அனைத்து மாடல்களுக்கும் 3% வரை உயர்வு!
Kia hikes prices dramatically after Maruti India price hike announcement Up to 3 increase for all models from April 2025
புதிய கார் வாங்கத் திட்டமிட்டு உள்ளீர்களா? உஷார்! கியா இந்தியா தனது அனைத்து கார் மாடல்களின் விலைகளையும் 3% வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் விநியோகச் சங்கிலி செலவுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு – முக்கிய தகவல்கள்
ஏப்ரல் 1, 2025 முதல் புதிய விலை அமலில் வருகிறது
உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை சவால்களுக்கு ஏற்ப கொரிய ஆட்டோமொபைல் நிறுவனத்தின் மாற்றம்
கியா கார் வாங்க திட்டமிட்டிருந்தால், மார்ச் மாதத்திற்குள் வாங்குவது சிறந்த தேர்வு!
கியா இந்தியாவின் முக்கிய விற்பனை சாதனைகள்
Kia Seltos – 6.90 லட்சம் யூனிட்கள் விற்பனை
Kia Sonet – 5 லட்சம் யூனிட்கள் விற்பனை
Kia Carens – 2.32 லட்சம் யூனிட்கள் விற்பனை
Kia Carnival – 15,000 யூனிட்கள் விற்பனை
விலை உயர்வின் பின்னணி
கியா இந்தியாவின் மூத்த துணைத் தலைவர் ஹர்தீப் சிங் பிரார், விலையேற்றம் நிறுவனத்தின் தரநிலைகளைப் பாதுகாக்கவும், உயர்நிலை கார்கள் வழங்கவும் தேவையானது என தெரிவித்துள்ளார். மாருதி சுசுகி இந்தியா சமீபத்தில் விலை உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து, கியாவும் இந்த முடிவை எடுத்துள்ளது.
English Summary
Kia hikes prices dramatically after Maruti India price hike announcement Up to 3 increase for all models from April 2025