பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ்,நிஃப்டி புள்ளிகள் கடும் சரிவு! - Seithipunal
Seithipunal


மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் 1,018 புள்ளிகள் சரிந்து கடும் வீழ்ச்சியை சந்தித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஐந்த நாட்களும் சரிவில் முடிவடைந்த நிலையில் மொத்தம் சென்செக்ஸ் 2,290.21 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

 மும்பை பங்குச் சந்தை நேற்று சென்செக்ஸ் 77,311 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது என்றும் இதையடுத்து  இன்று காலை சென்செக்ஸ் 77,384.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. ஆனால் மதியம் 12 மணிக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது என்றும்  இறுதியாக சென்செக்ஸ் 1,018.20 புள்ளிகள் சரிவை சந்தித்து 76,293.60புள்ளிகளில் நிறைவடைந்தது.இதனால்  இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 77,387.28 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக சென்செக்ஸ் 76,030.59 புள்ளிகளிலும் வர்த்தகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல சொமேட்டோ பங்கு 5 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை சந்தித்தது என்றும்  டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், எல்&டி போன்ற பங்குகளும் சரிவை எதிர்கொண்டது ஆனால்  பாரதி ஏர்டெல் பங்கு மட்டும் ஏற்றம் கண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் போன்று, இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் கடும் சரிவை எதிர்கொண்டது என்றும்  நேற்றைய வர்த்தகம் 23,381.60 புள்ளிகளில் நிறைவடைந்தது.ஆனால்  இன்று காலை நிஃப்டி 23,383.55 புள்ளிகளில் தொடங்கியது என்றும் குறைந்தபட்சமாக 22,986.65 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,390.05 புள்ளிகளில் வர்த்தகமான நிலையில், இறுதியாக நிஃப்டி 309.80 புள்ளிகள் குறைந்து 23,071.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறுதல், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும் என கூறப்படுகிறது.

மேலும் திங்கட்கிழமை அமெரிக்க மார்க்கெட் உயர்வை சந்தித்த நிலையில், ஆசிய மார்க்கெட்டுகளான ஷாங்காய், ஹாங்காங் போன்றவை சரிவை சந்தித்தன என்றும்  சியோல் மார்க்கெட் க்ரீனில் முடிவடைந்தது. ஆனால் ஐரோப்பாவின் பெரும்பாலான மார்க்கெட்டுகளும் சரிவை சந்தித்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கச்சா எண்ணெய் விலை 1.15 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 76.74 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது.இதனால் பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sensex, Nifty fall sharply as stock market falls sharply


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->