மத்திய ஆபிரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்; பொதுமக்கள் 55 பேர் பலி..!
55 innocent civilians killed in terrorist attack in Central Africa
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அத்துடன், காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/can-prlek.jpg)
இவ்வாறான தாக்குதல் சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளத்தோடு, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/canco-3zwax.jpg)
இந்நிலையில், காங்கோவின் தென்கிழக்கில் உள்ள இடுரி மாகாணத்தின் பஹிமா பட்ஜிரா பகுதியில் உள்ள கிராமங்களில் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த தாக்குதலில் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கிராமங்களில் உள்ள வீடுகளை பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
English Summary
55 innocent civilians killed in terrorist attack in Central Africa