நடிகர் சங்கத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நெப்போலியன்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், இந்தக் கட்டிட பணிகள் நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்தப் பணிகள் முழுமை பெற 40 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர்.

 

அந்த வகையில், சமீபத்தில் விளையாட்டுத் துறை அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். அவரைத் தொடர்ந்து, கமல்ஹாசன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் ஒரு கோடி நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் நிதியுதவி வழங்கினர். இந்த நிலையில், தற்போது நடிகர் நெப்போலியன் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 – 2006ம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன், சங்க கட்டிட வளர்ச்சிக்காக தற்போது ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியாய் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்துகளை கூறி நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor nepoliyan compensation to actors association


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->