நடிகை ரேகா நாயரின் கார் மோதி ஒருவர் மரணம்...ஓட்டுநர் கைது! - Seithipunal
Seithipunal


சென்னை ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மஞ்சன் என்பவர்,  பச்சையப்பன் தெருவில் மது போதையில் படுத்திருந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த கார் அவர் மீது ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து எம்ஜிஆர் நகரை சேர்ந்த கார் ஓட்டுநர் பாண்டி  என்பவரை கைது செய்த போலீசார் அவரின் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட பாண்டி நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் என்பதும், நடிகை ரேகா நாயரின் பெயரில்தான் இந்த கார் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Rekha Nairs car collided with one person and died Driver arrested


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->