பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக கவசம் கட்டாயம்! தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புமாணவர்களுக்கு பொதுத் தோ்வுகள் தொடங்க உள்ளன. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு முதல்முறையாக பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுகளை நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்யப்படுகிறது.

இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் முகக்கவசம் அணிய வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டநிலையில், தேர்வு அறையில் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர்ந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mask wear mandatory in public exam students


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->