மனதை அமைதிப்படுத்தும் ஜாதிக்காய் பால்.!!
how to make jathikkai milk
தினமும் இரவு நேரத்தில் ஜாதிக்காய்ப்பொடி கலந்த பால் பருகுவதால் உங்கள் உடலில் எண்ணற்ற நன்மைகள் உருவாகிறது. இது உங்களுக்கு சிறந்த செரிமானத்தைக் கொடுக்கிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. இப்படி பல நன்மைகளை கொண்ட ஜாதிக்காய் பால் தயாரிப்பது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
சூடான பால்
ஜாதிக்காய்
தேன் அல்லது நாட்டு சக்கரை
செய்முறை:-
ஜாதிக்காயை ஊறவைத்து சூடான பாலில் சேர்த்து பருகலாம் அல்லது கடையில் ஜாதிக்காய் பொடியை வாங்கி அதில் அரை ஸ்பூன் சூடான பாலில் கலந்து பருகலாம்.
இந்தப்பாலை பருகும்போது, இதனுடன் தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் எதுவும் சேர்க்காமல்தான் பருகவேண்டும். ஜாதிக்காயில் உள்ள சுவையே இந்த பாலின் சுவையை அதிகரிக்கும்.
English Summary
how to make jathikkai milk