பெரும் சோகம்! திடீர் துப்பாக்கி சூடு! 5 ராணுவவீரர்கள் மரணம்! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5தாக  உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று ஜம்மு காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தில் மச்சேரி பகுதியில் ராணுவ வீரர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். மேலும் 6 ராணுவ வீரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணுவ வீரர்கள் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்றது.

ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் அருகாமையில் உள்ள காட்டு வழியே தப்பி சென்றதாக கூறப்படுகிறது. பயங்கரவாத தகவல் தொடர்ந்து அந்தப் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 soldiers killed in Kashmir Terrorists attack


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->