மது பிரியர்களுக்கு டிஜிட்டல் சேவை அறிமுகம்.! அரசு முக்கிய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் சென்ற 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து சில்லறை மதுபான விற்பனையை அரசு கையகப்படுத்தியுள்ளது. தற்பொழுது, அதிகப்படியான மதுபான கடைகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்துகின்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த நவம்பர் மாதம் ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் சில்லறை மதுபான விற்பனை நிலையங்களில் ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்ய கூடிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. 

அந்த வகையில், தற்போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், முதல் கட்டமாக 1000 சில்லறை மதுபான கடைகளில் இந்த டிஜிட்டல் பணம் செலுத்துகின்ற வசதி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வசதியானது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் கொண்டுவரப்பட்டு இருக்கின்றது. எனவே, மதுபானத்தை நுகர்வோர்கள் போன் பே, கூகுள் பே ஸ்கேனர் கோடை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி கொள்ள முடியும். இதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anthra liquor shop digital money transformation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->