குஜராத்தில், படுதோல்வியடைந்த காங்கிரஸ்.. ராகுல்காந்தி வெளியிட்ட முக்கிய செய்தி.!  - Seithipunal
Seithipunal


குஜராத்தில் காங்கிரசுக்கு மக்கள் கொடுத்த முடிவை ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகின்றது. இதில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. 156 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் வெறும் 17 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் 77 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த முறை காங்கிரஸ் படுதோல்வியை அடைந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய நிலையில் இந்த தோல்வி குறித்து ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "குஜராத் மக்களுடைய முடிவை காங்கிரஸ் தாழ்மையுடன் ஏற்று க் கொள்கிறது. காங்கிரஸ் கட்சியை மறுசீரமைத்து மாநில மற்றும் நாட்டு மக்களுக்காக இன்னும் கடினமாக உழைப்போம்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Rahul Vanthu about Failure of Gujarat Election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->