அஜித்துக்கு வாழ்த்து சொல்லாம இருப்பாரா விஜய்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுரேஷ் சந்திரா! - Seithipunal
Seithipunal


அஜித், விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். ரசிகர்கள் இவர்களை போட்டியாளர்களாக பார்த்தாலும், இருவரும் தனிப்பட்ட முறையில் நண்பர்கள். 

தற்போது விஜய் அரசியலில் நுழைந்துள்ளார். மறுபக்கம் அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அஜித்தின் கலைத்துறை சேவையை பாராட்டி மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்தது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் அணைத்து அரசியல் கட்சி தலைவர்களும், திரைத்துறையை சேர்ந்தவர்களும் நடிகர் அஜித்துக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

ஆனால், விஜய் வாழ்த்து சொல்லவில்லை என சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

அஜித் ரேஸில் வெற்றி பெற்றதும், விருது அறிவிக்கப்பட்டதும் விஜய் தான் முதலில் வாழ்த்தினார் என்றும், இருவருக்கும் ஆத்மார்த்தமான நட்பில் இருப்பதாகவும், விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்பது உண்மை இல்லை என்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijay wish ajithukumar


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->