அமெரிக்கா || நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இந்திய மாணவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள அல்பானி நீர்வீழ்ச்சியில் இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உயர்கல்விக்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்பவர்கள் விபத்து மற்றும் தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது.

அந்த வகையில், ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம் கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் சாய் சூர்யா அவினாஸ். இவர் அமெரிக்காவில் உள்ள டிரின் பல்கலைகழகத்தில் படித்து வந்தார். 

இந்த நிலையில், அவினாஷ் நேற்று முன்தினம் கடந்த ஜூலை ஏழாம் தேதி நியூயார்க்கின் அல்பானி என்ற இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இந்த செய்தியை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்தது.

இதுகுறித்து அவினாஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவினாஷின் உடலை கொண்டுவருவதற்கான ஏற்பாட்டில் இறங்கியுள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian student died in america


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->