உறங்கிய நபருக்கு அதிகாலையில் கோடியில் காத்திருந்த அதிர்ஷ்டம்.! ₹.40 ரூபாயில் கோடீஸ்வரனான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கூலி வேலை செய்த நபர் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலத்தின் மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் அந்த பகுதியில் இருக்கும் மார்க்கெட்டில் சுமைதூக்குகின்ற கூலிதொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இத்தகைய நிலையில், ரூ.40 கொடுத்து ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கி இருக்கின்றார்.

அந்த லாட்டரிக்கு தற்போது ரூ.3,57,86,502.26 கோடிக்கு பரிசு விழுந்து இருக்கின்றது. அப்பொழுது, ராஜேஷ் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் உறக்கத்தில் இருந்து எழுந்து ரேஷன் கடைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்பொழுது, வழக்கம் போல செல்போனை ஆராய்ந்த போது அவருக்கு பரிசு விழுந்தது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, தனக்கு பரிசு விழுந்ததை ராஜேஷ் உறுதி செய்து கொண்டார். பின், இது குறித்து ராஜேஷ், "ஏழ்மையில் வாடிக்கொண்டிருந்த எனக்கு இந்த அதிர்ஷ்டம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இது நான் எதிர்பாராத ஒரு மாபெரும் அதிர்ஷ்டம்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala mallapuram men lottery ticket won


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->