தந்தை விற்ற லாட்டரி சீட் - மகனுக்கு கிடைக்கு பரிசு மழை.! - Seithipunal
Seithipunal


தந்தை விற்ற லாட்டரி சீட் - மகனுக்கு கிடைக்கு பரிசு மழை.!

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டையம் அருகே மூவாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் அதேபகுதியில் லாட்டரி கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் ராஜேஷ்குமார்.

கட்டிட தொழிலாளியான, இவர் தந்தையிடமிருந்து தினமும் லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் ராஜேஷ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அந்த சீட்டுகளுக்கு  ரூ.5000, ரூ.500 பரிசு கிடைத்தது. 

அந்த டிக்கெட்டுகளை ராஜேஷ்குமார் தனது தந்தையிடமே கொடுத்து காருண்யா பிளஸ் லாட்டரி சீட்டை வாங்கினார், அந்த லாட்டரி சீட்டில் அவருக்கு முதல் பரிசு ரூ. 80 லட்சம் விழுந்தது.

இதுகுறித்து ராஜேஷ்குமார் தெரிவித்ததாவது:- "தந்தையிடம் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.80 லட்சம் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியை தருகிறது. இந்த பரிசு பணத்தில் தனக்கு இருக்கும் அனைத்து கடன்களையும் அடைத்துவிட்டு தந்தைக்கு உதவுவேன்" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man won eighty lakhs lottary money in kerala


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->