#BREAKING :: பாஜகவின் வெற்றி இளைஞர்கள், ஏழைகளுக்கான வெற்றி..!! தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு..!! - Seithipunal
Seithipunal


குஜராத், இமாச்சலம் மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மற்றும் ஐந்து மாநிலங்களின் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. குஜராத் மாநிலத்தில் 156 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையுடன் பாஜக ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. அதேபோன்று இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸிடம் பாஜக ஆட்சியை பறி கொடுத்துள்ளது.

மேலும் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று பாஜக ஆட்சியில் உள்ள உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. 

இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து தொண்டர்களிடையே பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி "மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். இரு மாநில மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தல் வெற்றி பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது.

ஹிமாச்சல் மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாஜக பாடுபடும். ஹிமாச்சலில் குறைந்த சதவிகித வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்துள்ளோம். பாஜகவின் வெற்றி இளைஞர்கள், ஏழைகளுக்கான வெற்றி. மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன்" என தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi said BJPs victory is a victory for the youth and poor


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->