ரூ.500 - ரூ.5000 : தீபாவளிக்கு செம்ம அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ரங்கசாமி! - Seithipunal
Seithipunal


தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் தீபாவளி பரிசாகத் தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மேலும், தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள 10 பொருட்கள் ரூ.500 மானிய விலையில் தரப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், தீபாவளியை முன்னிட்டு கட்டிட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி பரிசாக ரூ.5 ஆயிரமும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும் வழங்கப்படும். 

மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் திறக்கப்படாத பகுதிகளில் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இலவச அரிசியை சிரமமின்றி மக்கள் பெற்று கொள்ளலாம்.

கான்பெட் நிறுவனம் மூலம் புதுச்சேரி மக்களுக்கு ரூ.1000-ம் மதிப்புள்ள 10 பொருட்களை ரூ.500 மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். விரைவில் அந்த 10 பொருட்கள் பற்றிய விவரம் தெரிவிக்கப்படும். 

ரேஷன் கார்டுகளை காட்டி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையத்தில் இதனை பெற்று கொள்ளலாம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Cm Announce Diwali 2024


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->