குடிநீர் தட்டுப்பாடு !காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே அவ்வையார்குப்பம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களது கோரிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் மன்றாட்டிய பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, திண்டிவனத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைப்பிடித்தனர்.

பஸ் முன்பு அமர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால் போக்குவரத்து அரை மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது, மேலும் பல பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பஸ்சில் சிக்கி தவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மயிலம் போலீசார் வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், ஆனால் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையாமல், பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People held a government bus with empty jugs near Mylam and protested


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->