அதிர்ச்சி!...சிறுநீர் மூலம் சப்பாத்தி சமைத்த பணிப்பெண் அதிரடியாக கைது! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் என்ற பகுதியில் தொழில் அதிபர் ஒருவர் வசித்து வரும் நிலையில், இவர்களது இல்லத்தில்  சமையல் பணிப்பெண் ரினா என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக  வேலை செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே தொழில் அதிபரின் குடும்பத்தினருக்கு திடீரென்று  கடந்த சில நாட்களாக கல்லீரலில் பிரச்சினை இருந்ததாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து தொழில் அதிபரின் குடும்பத்தினர் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற போதிலும், குணமாகாததால், மருத்துவர்கள் உணவில்  பிரச்சினை இருக்கக்கூடும் என்று தெரிவித்ததை அடுத்து,  இவர்களின் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் உணவில் எதாவது கலந்து இருப்பாரோ என்ற சந்தேகத்தின் பேரில்,  வீட்டில்  உள்ள சமையல் அறையில் செல்போனில் கேமராவை ஆன் செய்து  மறைத்து வைத்திருந்துள்ளனர்.

அதில், சமையல் வேலை செய்யும் பெண் ஒருவர், சமையல் அறையில் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிப்பதும், பின்னர் சிறிது நேரம் கழித்து அதே பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசையும் வீடியோவை பார்த்து அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து  பணிப்பெண் மீது போலீசில் அளிக்கப்பட புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock the maid who cooked chapati with urine was arrested


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->