பிரபல நடிகரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி!...முக்கிய குற்றவாளி அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலம்,லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலான மாபியா கும்பல் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் தனது இல்லத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதாக நடப்பு  ஆண்டின் தொடக்கத்தில் நடிகர் சல்மான் கான் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். இதே போல், கடந்த ஜனவரி மாதத்தில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி பன்வாலில் உள்ள தனது பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக சல்மான் கான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் சல்மான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை நவி மும்பையில் போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட சுகா என்பவர் அரியானாவில் உள்ள பானிபட்டில் இருந்து கைது செய்யப்பட்டதாகவும், அவர் ஹரியானாவை சேர்ந்தவர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ள நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் சம்பத் நேஹ்ரா கும்பல்கள், சல்மான் கானை வேவு பார்க்கும் நோக்கத்துடன் அவரின் பந்த்ரா இல்லம், பான்வேல் பண்ணை வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் அவரின் நடமாட்டத்தை கண்காணிக்க 60 - 70 பேரை களமிறக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Conspiracy to kill a famous actor with a gun main culprit arrested


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->