ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்.. தெலுங்கானாவில் நடந்த சுவாரசிய நிகழ்வு.! தாய் - சேய் நலம்.!! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தை சார்ந்த 27 வயது பெண்மணி, ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்தார். தாயும் - சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் 27 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 34 வாரங்களுக்கு முன்னதாக (7.8 மாதம் ~ கிட்டத்தட்ட 8 மாதங்கள்) கருவுற்று இருந்த நிலையில், சமீபத்தில் இவருக்கு குழந்தை எப்போது வேண்டும் என்றாலும் பிறக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, பிரசவத்திற்காக பெண்மணி ஹைதராபாத் மெஹதிப்பட்டினம் நகரில் அமைந்துள்ள மீனா மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். 

மேலும், அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியான நிலையில், மருத்துவர் சோஹிபா ஷுகோ தலைமையில் 3 மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.  இந்நிலையில், பெண்மணிக்கு பிரசவ வலி இன்று ஏற்பட்டு அடுத்தடுத்து குழந்தைகளை பிரசவித்தார்.

ஒரு ஆண் குழந்தை, 3 பெண் குழந்தைகள் என மொத்தமாக 4 குழந்தைகளை பிரசவித்தார். தாய், சேய் அனைவரும் நலமாக இருப்பதாகவும், பிறந்துள்ள குழந்தைகள் நால்வரும் 1.3-1.5 எடை அளவில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Hyderabad Mina Hospital 27 Aged Woman Delivery 4 Baby in Single Delivery Both are Safe Doctors Said


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->